Photobucket

Wednesday, December 23, 2009

சா(ஜா)தி

சாதி தமிழர் பெற்ற சாபமா ? வரமா ?.

வள்ளுவம் காணாதது ஜாதி வாழ்க்கை பயணத்தில் நாம் கண்டது

 ஜாதி ஔவை பேசிய ஜாதிக்கும் பாரதி கண்ட ஜாதிக்கும் இன்றைய நடைமுறை சாதிக்கும் நிறைய வேறுபாடு உண்டு ஜாதி

 . சாதி. 

அன்று ஜாதி . 
இன்று சாதி . 
 சாதி சாதிக்கும் 

இன்றைய சாதி நிபுணத்துவம் நோக்கி நகர்கிறது . 

 இதை தமிழர் உணர வேண்டும் அன்றைய சாதி வேறு இன்றைய சாதி வேறு . 

 அன்றைய சாதி ஈனம் செய்யும்

 இன்றைய சாதி இனம் காட்டும் . 

 அன்றைய சாதி உடல் சாதி .அவமதிக்கும் ....புறந்தள்ளும் .

 இன்றைய சாதி துறை சாதி ... நிபுணத்துவம் ஆகும். 

 இன்று, சாதி தமிழர் பெற்ற வரம் .... வரபிரசாதம் . 

 தோணி இயக்குவான் தொல்லை வருணத்து காணிற் கடைப்பட்டான் என்று இகழான் - இது செய்யுள் இவன் படகு ஓட்டுபவன் .இவன் கீழ் சாதி என்று ஆற்றை கடக்கும் அந்த நேரம் படகில் பயணம் செய்யும் எவரும் எண்ண மாட்டார் . படகு ஓட்டுபவனை ஆதாரமாகக் கொண்டு ஆற்றைக் கடந்து போவார் . அப்போது யார் கண்ணுக்கும் சாதி தெரியாது. அன்று அவன் தோணியன் - கீழ் ஜாதி இன்று அவன் போக்குவரத்து துறையன்..(TRANSPORT DEPARTMENT) . 

 வீட்டின் பிணம் விழும் . பிணம் வெட்டியான் எனும் கீழ் ஜாதிகாரன் ஆதிக்கத்தில் இருக்கும் .வெட்டியான் பிணத்தின் எஜமான் . அன்று அவன் வெட்டியான் இன்று அவன் ..( UNDERTAKER ) 


 வீட்டின் மலக் கூடத்தின் தொட்டி / தோம்பு நிறைத்தவுடன் தோட்டியை அதாவது (சக்கிலியனை ) கூப்பிடுவர் . அப்பொழுது சக்கிலி எனும் தோட்டி எஜமான் ஆகி விடுவான். அவன் இல்லை எனில் மேல் சாதிகாரன் பாடு அதோ கதிதான் அன்று அவன் ( தோட்டி ) சக்கிலியன் இன்று அவன் ..( wastewater and sanitation -  sewerage system 

 அன்று முடி சிரைப்பவன் பரியாரி இன்று அவன் ..(SALOON) சிகையலன்காரி 

 அன்று சமையல்காரன் கீழ்ஜாதி இன்று அவன் ..(CHEF) .
 வெளியுலக உணவு முழுதும் அவனது ஆதிக்கம் .

 அன்று சட்டி, முட்டி, சாமான் செய்பவன் குசவன் . இன்று அவன் சிறுதொழில்காரன் ..( INDUSTRY ) 

 அன்று பள்ளத்தில் விழுந்து கிடந்தவன் பள்ளன் . பள்ளமான நீர் தேக்க இடத்தின் விவசாயி அவன் . அதன் நுட்பம் நுணுக்கம் தெரிந்தவன் . அன்று அவன் பள்ளர் இன்று அவன் ..(AGRICULTURE)

 அன்று தென்னை, பனை பாக்கு இறக்கியவன் சாணான் ( நாடார் ) இன்று அவன் வர்த்தகன் /வியாபாரி.

 அன்று பறை சாற்றியவன் பறையன் இன்று அவன் தொடர்பு துறையாளன் ..(COMMUNICATION SECTOR) 


 அன்று பணத்தோடு புரண்டவன் பணக்காரன் ஆனான் - முதல் போட்டவன் முதலி - கட்டு செட்டா கணக்கு போட்டவன் செட்டி அதனால் அவன் மேல்ஜாதி . இன்று ஆங்காங்கு எலாரும் finance


 படைத்தொழில்.... போர்த்தொழில் செயல் இழந்தபின் பிழைக்க வழி இல்லாமல் இருந்தனர் ஒரு பிரிவினர். உடல் பலத்தால் திருட்டும், கள்ளமும் புரிந்து கள்ளர் ஆகினர். உடல் பலமும், தைரியமும், வீரமும், பராக்கிரமமும், நிலை தாழ்ந்தபோதும் அடாவடியாலும் , குண்டர்த்தனதாலும் மேல்ஜாதிகாரனாக தாங்களே தங்களை உருவாக்கிக் கொண்டனர். இன்று அவர்கள் இந்த மண்ணில் நிர்வாகிகள் ;..(MANAGEMENT) . 

 

 ஆடு, மாடு வளர்த்தவர். இடையர் குலம் - கீழ்ஜாதி. பிறகு, அவர் பால் வியாபாரி ஆகியதால் கோனார்/ யாதவர் ஆனார் . கண்ணன் எனும் கடவுள் அந்த சாதியில் வளர்ந்தார் . அதனாலும் அவர் மேல்சாதியாகி விட்டார். இவர் இன்று மேல்ஜாதி 


 ஆதியில் பிராமணர்கள் மேல்ஜாதி, அரசர்கள் மேல்ஜாதி . இடையில் கள்ளர் , முதலி , செட்டி, கோனார்,வன்னியர், கொங்கன் , இப்படியாக மேல்ஜாதி . இன்றோ பல்லி கவுண்டர், நாடார், பள்ளர் , மேல்ஜாதி ஆகி கொண்டிருக்கின்றனர். பறையர், பாணன், சாணன், சக்கிலி, எல்லாம் வரிசை பிடித்து மேல்ஜாதியாக ஆகி கொண்டிருக்கின்றனர் . நாளை யாரும் கீழ் ஜாதியற்றவர். அவர் அவரும் புதுபெயரும், தோற்றமும் பெறுவர். 


 கள்ளர் எனும் தேவர் குலம், பள்ளர் எனும் தேவேந்திர குளம், சோலி வெள்ளாளன், பிள்ளை, இப்படியாக புது பெயரும் , தோற்றமும் வந்து கொண்டே இருக்கும் . 

இதுவே தீர்ப்பு . 


 பணம் உள்ளவர் எல்லாம் ; பணம் படைத்தவர் எல்லாம் இனி கீழ்சாதியாகார் ; எல்லாரும் மேல்ஜாதி . கோடிஸ்வர ஆனந்த கிருஷ்ணன் வீட்டில் பிராமணன் சம்மந்தம் செய்வான்.

 இளையராஜா, எ. ஆர். ரஹ்மான், விஜய், விஜயகாந்த் , எல்லாருமே இனி மேல்ஜாதிதான். 

மலேசிய மண்ணில் சாதி - எம் .ஜி .பண்டிதன் அரசியல் போர் தொடுத்த போதே கதிகலங்கி விட்டது. அன்று தொட்டு அது சாதிக்க தொடங்கி விட்டது. எல்லாம் புது புது முலாம் பூசி பளிச்சென்று ஆகி விடும் . 


 இப்படியாக இன்று எல்லாரும் மேல்ஜாதியாக மாறி கொண்டிருக்கையில் இன்று இன்னும் இழிநிலை . 


இம்மண்ணில் தமிழர் இழிநிலையில் உள்ளதை நம்மால் உணர முடிகிறதே !! அது என்ன வகை இழிவுநிலை....!! 

அதை சிந்திக்க வேண்டும் . 

 நிலைகெட்ட மனிதர்- தமிழர் நெஞ்சு பொறுக்குதில்லை நிலைகெட்ட மனிதர் இவர் .... என்றான் பாரதி . ஆம்! தமிழர் நிலை கெட்டவர் தன்னிலை மறந்தவர் . உன்னையே நீ அறி என்று இவர்களை பார்த்து கண்டிப்பாக சொல்ல வேண்டும் சாதியில் உயர்ந்ருந்தாலும் தமிழன் தன்னிலை மறக்கிறான்.  பெரும் பணக்காரர்கள் பலர் யாராயிருந்தாலும் தமிழர்களாக இருந்தால் தன்னிலை மறக்கின்றனர். ஏழையாக இருந்தாலும் தமிழர் தன்னிலை மறக்கின்றனர் . 


 உன்னையே நீ அறி என்று நாம் சொல்ல நேரும் போது தன்னிலை மறந்த தமிழர்களே முன் நிற்பர் . 


 தன்னிலை மறந்த தமிழரைதான் பாரதி நிலைகெட்ட மனிதன் என்றான். 


நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டல் ..... நெஞ்சு பொறுக்குதிலை என்றான். 


 பாரதி கண்ட அந்த நிலைகெட்ட மனிதரை யார் ? 
அவர் எப்படி இருப்பார் ? 
என்ன செய்வார் ? 

ஆம்,

நிலைகெட்ட மாந்தர் தன் இன மனம் , மொழி மானம் இல்லாது காக்காது , பணம் பதவி பட்டம் பொருள் இச்சித்து கையேந்தி அடிமை வாழ்வு வாழ்வார்.