சாதி தமிழர் பெற்ற சாபமா ? வரமா ?.
ஜாதி ஔவை பேசிய ஜாதிக்கும்
பாரதி கண்ட ஜாதிக்கும்
இன்றைய நடைமுறை சாதிக்கும் நிறைய வேறுபாடு உண்டு
ஜாதி
.
சாதி.
அன்று ஜாதி .
இன்று சாதி .
சாதி சாதிக்கும்
இன்றைய சாதி நிபுணத்துவம் நோக்கி நகர்கிறது .
இதை தமிழர் உணர வேண்டும்
அன்றைய சாதி வேறு
இன்றைய சாதி வேறு .
அன்றைய சாதி ஈனம் செய்யும்
இன்றைய சாதி இனம் காட்டும் .
அன்றைய சாதி உடல் சாதி .அவமதிக்கும் ....புறந்தள்ளும் .
இன்றைய சாதி துறை சாதி ... நிபுணத்துவம் ஆகும்.
இன்று, சாதி தமிழர் பெற்ற வரம் .... வரபிரசாதம் .
தோணி இயக்குவான் தொல்லை வருணத்து
காணிற் கடைப்பட்டான் என்று இகழான் - இது செய்யுள்
இவன் படகு ஓட்டுபவன் .இவன் கீழ் சாதி என்று ஆற்றை கடக்கும் அந்த நேரம் படகில் பயணம் செய்யும் எவரும் எண்ண மாட்டார் . படகு ஓட்டுபவனை ஆதாரமாகக் கொண்டு ஆற்றைக் கடந்து போவார் . அப்போது யார் கண்ணுக்கும் சாதி தெரியாது.
அன்று அவன் தோணியன் - கீழ் ஜாதி
இன்று அவன் போக்குவரத்து துறையன்..(TRANSPORT DEPARTMENT) .
வீட்டின் பிணம் விழும் . பிணம் வெட்டியான் எனும் கீழ் ஜாதிகாரன் ஆதிக்கத்தில் இருக்கும் .வெட்டியான் பிணத்தின் எஜமான் .
அன்று அவன் வெட்டியான்
இன்று அவன் ..( UNDERTAKER )
வீட்டின் மலக் கூடத்தின் தொட்டி / தோம்பு நிறைத்தவுடன் தோட்டியை அதாவது (சக்கிலியனை ) கூப்பிடுவர் . அப்பொழுது சக்கிலி எனும் தோட்டி எஜமான் ஆகி விடுவான். அவன் இல்லை எனில் மேல் சாதிகாரன் பாடு அதோ கதிதான்
அன்று அவன் ( தோட்டி ) சக்கிலியன்
இன்று அவன் ..( wastewater and sanitation - sewerage system )
அன்று முடி சிரைப்பவன் பரியாரி
இன்று அவன் ..(SALOON) சிகையலன்காரி
அன்று சமையல்காரன் கீழ்ஜாதி
இன்று அவன் ..(CHEF) .
வெளியுலக உணவு முழுதும் அவனது ஆதிக்கம் .
அன்று சட்டி, முட்டி, சாமான் செய்பவன் குசவன் .
இன்று அவன் சிறுதொழில்காரன் ..( INDUSTRY )
அன்று பள்ளத்தில் விழுந்து கிடந்தவன் பள்ளன் . பள்ளமான நீர் தேக்க இடத்தின் விவசாயி அவன் . அதன் நுட்பம் நுணுக்கம் தெரிந்தவன் .
அன்று அவன் பள்ளர்
இன்று அவன் ..(AGRICULTURE)
அன்று தென்னை, பனை பாக்கு இறக்கியவன் சாணான் ( நாடார் )
இன்று அவன் வர்த்தகன் /வியாபாரி.
அன்று பறை சாற்றியவன் பறையன்
இன்று அவன் தொடர்பு துறையாளன் ..(COMMUNICATION SECTOR)
அன்று பணத்தோடு புரண்டவன் பணக்காரன் ஆனான்
- முதல் போட்டவன் முதலி
- கட்டு செட்டா கணக்கு போட்டவன் செட்டி
அதனால் அவன் மேல்ஜாதி . இன்று ஆங்காங்கு எலாரும் finance
படைத்தொழில்.... போர்த்தொழில் செயல் இழந்தபின் பிழைக்க வழி இல்லாமல்
இருந்தனர் ஒரு பிரிவினர். உடல் பலத்தால் திருட்டும், கள்ளமும் புரிந்து கள்ளர் ஆகினர். உடல் பலமும், தைரியமும், வீரமும், பராக்கிரமமும், நிலை தாழ்ந்தபோதும் அடாவடியாலும் , குண்டர்த்தனதாலும் மேல்ஜாதிகாரனாக தாங்களே தங்களை உருவாக்கிக் கொண்டனர். இன்று அவர்கள் இந்த மண்ணில் நிர்வாகிகள் ;..(MANAGEMENT) .
ஆடு, மாடு வளர்த்தவர். இடையர் குலம் - கீழ்ஜாதி.
பிறகு, அவர் பால் வியாபாரி ஆகியதால் கோனார்/ யாதவர் ஆனார் . கண்ணன் எனும் கடவுள் அந்த சாதியில் வளர்ந்தார் . அதனாலும் அவர் மேல்சாதியாகி விட்டார்.
இவர் இன்று மேல்ஜாதி
ஆதியில் பிராமணர்கள் மேல்ஜாதி, அரசர்கள் மேல்ஜாதி .
இடையில் கள்ளர் , முதலி , செட்டி, கோனார்,வன்னியர், கொங்கன் ,
இப்படியாக மேல்ஜாதி .
இன்றோ பல்லி கவுண்டர், நாடார், பள்ளர் , மேல்ஜாதி ஆகி கொண்டிருக்கின்றனர். பறையர், பாணன், சாணன், சக்கிலி, எல்லாம் வரிசை பிடித்து மேல்ஜாதியாக ஆகி கொண்டிருக்கின்றனர் .
நாளை யாரும் கீழ் ஜாதியற்றவர்.
அவர் அவரும் புதுபெயரும், தோற்றமும் பெறுவர்.
கள்ளர் எனும் தேவர் குலம், பள்ளர் எனும் தேவேந்திர குளம், சோலி வெள்ளாளன், பிள்ளை, இப்படியாக புது பெயரும் , தோற்றமும் வந்து கொண்டே இருக்கும் .
இதுவே தீர்ப்பு .
பணம் உள்ளவர் எல்லாம் ; பணம் படைத்தவர் எல்லாம்
இனி கீழ்சாதியாகார் ; எல்லாரும் மேல்ஜாதி .
கோடிஸ்வர ஆனந்த கிருஷ்ணன் வீட்டில் பிராமணன் சம்மந்தம் செய்வான்.
இளையராஜா, எ. ஆர். ரஹ்மான், விஜய், விஜயகாந்த் , எல்லாருமே இனி மேல்ஜாதிதான்.
மலேசிய மண்ணில் சாதி - எம் .ஜி .பண்டிதன் அரசியல் போர் தொடுத்த போதே
கதிகலங்கி விட்டது. அன்று தொட்டு அது சாதிக்க தொடங்கி விட்டது. எல்லாம் புது புது முலாம் பூசி பளிச்சென்று ஆகி விடும் .
இப்படியாக இன்று எல்லாரும் மேல்ஜாதியாக மாறி கொண்டிருக்கையில் இன்று
இன்னும் இழிநிலை .
இம்மண்ணில் தமிழர் இழிநிலையில் உள்ளதை நம்மால் உணர
முடிகிறதே !!
அது என்ன வகை இழிவுநிலை....!!
அதை சிந்திக்க வேண்டும் .
நிலைகெட்ட மனிதர்- தமிழர்
நெஞ்சு பொறுக்குதில்லை நிலைகெட்ட மனிதர் இவர் ....
என்றான் பாரதி .
ஆம்! தமிழர் நிலை கெட்டவர்
தன்னிலை மறந்தவர் .
உன்னையே நீ அறி என்று
இவர்களை பார்த்து கண்டிப்பாக
சொல்ல வேண்டும்
சாதியில் உயர்ந்ருந்தாலும் தமிழன் தன்னிலை மறக்கிறான். பெரும் பணக்காரர்கள் பலர் யாராயிருந்தாலும் தமிழர்களாக இருந்தால் தன்னிலை மறக்கின்றனர். ஏழையாக இருந்தாலும் தமிழர் தன்னிலை மறக்கின்றனர் .
உன்னையே நீ அறி என்று நாம் சொல்ல நேரும் போது தன்னிலை மறந்த தமிழர்களே முன் நிற்பர் .
தன்னிலை மறந்த தமிழரைதான் பாரதி நிலைகெட்ட மனிதன் என்றான்.
நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டல் .....
நெஞ்சு பொறுக்குதிலை என்றான்.
பாரதி கண்ட அந்த நிலைகெட்ட மனிதரை யார் ?
அவர் எப்படி இருப்பார் ?
என்ன செய்வார் ?
ஆம்,
நிலைகெட்ட மாந்தர் தன் இன மனம் , மொழி மானம் இல்லாது காக்காது , பணம் பதவி பட்டம் பொருள் இச்சித்து கையேந்தி அடிமை வாழ்வு வாழ்வார்.