Photobucket

Monday, November 23, 2009

கவலைப்பட என்ன இருக்கிறது ! - 8


கவலைக்கு வரவு சொல்வோம் , விருந்து வைத்து அனுப்புவோம்

தீட்டின மரத்தில்
கூர் பார்க்கப்படும்


வேளை வந்தால்
வளர்ந்த கடா மார்பில் பாயும்


பாலை வார்த்தும் பாம்பு
விசத்தின் மயம் .


புலி பதுங்குகிறது
பாய்ந்து விடும் .


தடம் பார்க்கும்
யானைக்கும் அடி சறுக்கும் .





துன்பம் தரும் கவலைகள்
வந்து  போகும்  .,
வந்த  பின் காப்பது மூடத்தனம் ,
வருகையில்  காப்பது  அமளித்தனம்  . 
நல்ல  ஏமாளித்தனம்.




முன்னறிந்த  வல்லமையால்
வரவு  சொல்வோம் .
வந்து  போகும்  கவலைக்கு 
விருந்து வைப்போம் .... 

வெளி  செல்லும்  வேளை  வரை 
சொந்தம்  என்று  அதனையே 
உறவு  சொல்வோம்.

காலம்  வரும்  
காலம் வரை காத்திருப்போம் 
விடிவு  காலம்  வரும்  
வேளை  வந்தால் 
அனுப்பி  வைப்போம் .
வழி  அனுப்பி  வைப்போம்.



(ஆக்கம்: 18/11/2001)

No comments: